Sunday, May 25, 2014

Blogpostஎஸ்.எஸ்.எல்.ஸி தேர்வு முடிவு, - செய்தியும் புலம்பலும் .


Image Source: Dinamani

முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.ஸி பரிட்சையில் தேர்ச்சி அடைந்தவர்கள் பட்டியல் வெளியிட மறுநாள் தினசரி பத்திரிக்கைகளில் கூடுதல் பக்கங்கள் இணைப்பதுண்டு.. முதல் பக்கத்தில் "ஒரு பகுதியை" (மட்டுமே) முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளை பற்றி செய்திகளால் நிரப்பி இருப்பார்கள்..
ஆனால் இப்பெல்லாம் ,
முதல் இடங்களை பிடித்த மாணவமாணவியர் பெயர் பட்டியலுக்கே கூடுதல் பக்கங்கள் இணைக்க வேண்டிய நிலைக்கு ஆகிடுச்சு..

பத்தொன்பது மாணவர்கள் முதலிடம் என்றும், 125 மாணவமாணவியர் இரண்டாம் இடம் என்றும், 321 மாணவ மாணவியர்கள் மூன்றாம் இடம் என்றும் அறிந்தேன்.. இவர்களில்லாம்ல் மாவட்ட வாரியாக முதலிடம் பிடித்தவர்கள், பாட வாரி முதலிடம் பிடித்தவர்கள் என அனைவரையும் கணக்கிட்டால் சில லட்சங்களுக்கு போகும் என்பதலில் எந்த சந்தேகமும் வேண்டாம்..

வெற்றிப் பெற்றவர்களுக்கு பாராட்டுக்களையும், வெற்றியை விடா முயற்ச்சியுடன் விரட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளும் இந்த சமையத்தில்

கல்வியின் தரம் உயர்ந்து விட்டதா என்று பார்த்தால் , முதல் இடம் பிடித்தவர்கள் செய்தி தொலைக்காட்சிகளுக்கு அளிக்கும் பேட்டிகளிலே தெரிகிறது.. நிச்சயம் தரம் உயர்ந்த அறிகுறி இல்லை.. பதினைந்து-இருபது ஆண்டுகளுக்கு முன்னர் முதலிடம் பிடித்த மாணவமாணவியர் என்ன சொன்னார்களோ அதே தான் இப்பவும் வெற்றிக்கு காரணமாக ஒப்புவித்துக் கொண்டிக்கிறார்கள்.. தங்களை "பெற்றவர்கள், ஆசிரியர், தலைமை ஆசிரியர், பிரின்சிப்பால் மற்றும் சிலர்களின் கடின உழைப்பு" என்றால்லாம் சொல்வது தான் வாடிக்கை....

'குறிக்கோளாக என்ன பண்ணுவீங்க?"' என்ற கேள்விக்கான பதிலிலாவது மாற்றம் இருக்குமா என்றால் அதுவும் , மனப்பாடம் செய்த வரிகளே...

"மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.. "(கடந்த இருவது முப்பது வருடங்களாக முதலிடம் பிடித்தவர்கள் அனைவரும் மருத்துவர் ஆகி சேவை செய்கிறார்கள் என்றால் இன்று தரமான மருத்துவம் பலருக்கு எட்டா கனியாக இருந்திருக்காது.. ) இதே "சேவை செய்வோம்" என்று மனப்பாடம் செய்த வரிகளை ஒப்புவிதவர்கள் தான், ஒருவருடம் கிராம புறங்களில் பனி புரிந்தால் மட்டுமே மருத்துவம் முழுமை பெரும் என்ற அரசின் ஆணையை ஏற்க மறுத்து சாலை இறங்கி போராட்டம் பண்ணவர்கள்.
சரி அது ஒரு புறமிருக்கக, இதே முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் தன்னை கடின உழைப்பால் முன்னுக்கு உயர்த்தி விட்ட ஆசிரியர்களாக வேண்டும் என்றோ, ஏதேனும் ஒரு துறை சார்ந்த படிப்பில் சிறந்து விளங்கி சாதனைகள் படைக்க வேண்டும் என்றோ, புதுப் படைப்புகள் உருவாக்க வேண்டும் என்றோ எவரேனும் சொல்லுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு இன்றும் எதிர்ப்பார்ப்பாகவே இருக்கிறது..

தன் அரசாங்கத்தில் க்ளர்க்க் மற்றும் உதவியாளர் பதவிகளுக்கு போதுமான அளவிற்கே அறிவு கொடுக்கும் கல்வி முறையை ஆங்கிலேயர் உருவாக்கி இருந்தனர், அரசாங்கம் பல மாறினாலும், இன்று வரை அந்த பழங்கால கல்வி முறையில் மட்டும் எந்த மாற்றமும் செய்யாமல் சிலபஸ் மட்டுமே மாற்றிக் கொண்டு, சமச்சீர், என்றும் சிபிஸ் சி என்றும் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்..

படித்தவர்கள் பாடம் நடத்துகின்றனர், படிக்காதவர்கள் பள்ளிக்கூடம் நடத்துகின்றனர் என்ற நிலை இருக்கும் வரை இதற்க்கு விடிவொன்றும் பிறப்பதற்கான வாய்ப்பில்லை என்றே தெரிகிறது..

விடியும் வரை காத்திருப்போம்..