Wednesday, July 2, 2008

பெட்ரோல் விலை ஏற்றம் எதிரொலி

மனைவி: இன்னைக்கு என்ன எங்கையாவது விலை உயர்ந்த இடத்துக்கு கூட்டிட்டு போங்க டியர் ...
கணவன்: சரி ரெடி ஆகு போகலாம்..!
மனைவி: எங்கே போக போறோம்..!
கணவன்: பெட்ரோல் பங்க்...!
_____________________________________________________________


பெட்ரோல் விலையேற்றத்தை அடுத்து,
சுவாமி கில்மானந்தாவின் அருளுரை..

உங்கள் வாழ்வில் சந்தோஷம்...
பெட்ரோல் விலை போல் தினமும் உயரட்டும்


துன்பங்கள்..
ஸ்ரேயா டிரஸ் போல குறையட்டும்...

______________________________________________________________________________

சின்னா : சார், என் பொண்டாட்டி, பொண்ணு ரெண்டு பேறும் நேத்துல இருந்து காணும்... கண்டு பிடிச்சி குடுங்க சார் ப்ளீஸ்...

இன்ஸ்பெக்டர்: யோவ்..! அவன் அவன் இங்க பைக் டேங்க் ல இருந்த பெட்ரோல காணும் நு காலைல இருந்து தேடிகிட்டு இருக்கான்...
இதுல வந்துட்டானுங்க, பொண்டாட்டி யா காணும், புள்ள குட்டிய காணும்னு.. போ போய் ஒரு கம்ப்ளைன்ட் எழுதி குடுத்துட்டு போ, கெடைச்சா சொல்லி அனுப்புறோம்..

0 comments: