Friday, April 2, 2010

Simple Science : டி ஜாடியின் மூடியில் சிறிய துவாரம் எதற்கு?

தினமும் நாம யோசிக்க நேரம் இல்லாத, கவனிக்காத நிறைய அறிவியல் நிகழ்வுகள், சுற்றியும் நடந்துகிட்டு தான் இருக்கு.. உதாரணம்> சுற்றுபுறத விட எப்பவும் நாம வாய்குள்ள வெப்பமா தான் இருக்கும், ஆனா உள்ளங்கைல காற்று ஊதினா அது குளுமையா உணர்வீங்க? எப்படி, சூடு அதிகமா இருக்கிற வாய்குள்ள போயிட்டு வெளிய வார காற்று குளிர்ச்சியா இருக்கும்? நு யோசிச்சி இருக்கீங்களா>? இந்த மாதிரி உங்கள கொலப்பி அதுக்குள்ள மீன் புடிகுறது தான் இந்த "Simple Science " தொடர்ச்சியின் நோக்கம்.
சுற்றி நடக்குற சின்ன சின்ன விஷயத்துக்கு அறிவியல் காரணம் கண்டு பிடிக்கலாம்நு தான்..
முயற்சி வெற்றி பெற எனக்கு நானே வாழ்த்து தெரிவிச்சிகிட்டு .............

விடையை பற்றி எழுதுவதற்கு முன் இந்த கேள்வி எதற்கு தேர்வு செய்தேன் என்று சிந்தித்தேன், அதற்கு காரணம் நான் எழுதி அனுப்பிய பல விடைகளில் இது ஒன்று மட்டும் தான் இது வரை "The Hindu " நாளிதழில் பிரசுரிக்க பட்டுள்ளது என்ன கொடுமை சார் இது?.. (லிங்க் கீழ கொடுத்துள்ளேன், last line).

பொதுவாக ஒரு மூடிய ஜாடி அல்லது குவளை யில் இருக்கும் திரவத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊற்றும் பொது , "போலுக்" "போலுக்" என்ற சத்தத்துடன் வெளியேறும், நாம ஊற்ற நெனைக்கும் பதித்ரத விட்டு கீழ சிந்துவதற்கு நெறைய வாய்ப்பு உண்டு.
இதற்க்கு காரணம், பாத்திரத்துக்கு உள்ளே இருக்கும் திரவத்தை வெளியேற்றும் பொது, அதன் வெற்றிடத்தை நிரப்புவதருக்கு சுற்றுப்புற காற்று திரவத்தில் உள்ளை விரையும், ஒரே சமையத்தில் உள்ளிருக்கும் திரவம் வெளியேயும் , வேலையே இருக்கும் காற்று உள்ளையும் போக முயில்வது தான்.

இந்த கஷ்டத்த குறைக்க தான் மூடி வச்ச ஜாடிக்கு மேல ஒரு சின்ன துவாரம் அல்லது ஓடை இருக்கும். அதா நாம சரியான திசைல இருக்கும் படிய மூடினோம் என்றால், காபியோ, டி'யோ , சுடு தண்ணியோ , ஏதுவ இருந்தாலும் கீழ சிந்தாமல் , ஜாடியில் இருந்து ஊற்ற முடியும். சரியான திசை என்பது, காற்று போகும் துவாரம் ஜாடியின் வாய்க்கு நேர் எதிர் திசையில் இருக்குமாறு ஜாடியின் மூடியை மூட வேண்டும். ஜாடியின் வாய் துவாரமும், காற்று போகும் துவாரமும் ஒரே திசைல இருக்கிற மாதிரி மூடிநீங்க, பழைய படி ஜாடிக்கு உள்ள இருக்கும் திரவம் ஊற்றும் போது ரெண்டு துவரதையும் அடைசிகிட்டு, காற்று உள்ளே போக விடாது.


தப்பான திசையில் மூடினோம் என்றால், எப்பவும் போல "போலுக் போலுக்கு"நு தான் உங்க கோபி ஊத்தும்.

சரியான திசைன்னு சொன்னத விளக்குறதுக்கு படம் கீழே....




அடுத்த "சிம்பிள் சயின்ஸ்" ல சந்திப்போம்..
வாய்குள்ள இருந்து வந்த காத்து எப்படி ஜில்லுநு இருக்குனு சொல்லவே இல்லையே?
விடைய அடுத்த பதிப்புல சொல்லறேன், அது வரைக்கும் நீங்களே யோசிச்சி கண்டுபிக்க முயற்சி பண்ணுங்க..
இது பெரிய ராக்கெட் தத்துவம் இல்லை, அதானலே நீங்க கண்டு பிடிச்சாலும் என்கிட்டே சொல்லுங்க சரியாய் தப்பான்னு நாம பேசி முடிவு பண்ணிக்கலாம்..



டிஸ்கி: என்னோட தமிழ் கொஞ்சம் தகிடதத்தோம் தான், நீங்க adjust panni போறதுக்கு வேண்டுகோள், அத விட்டு "ஷேம் ஷேம், பப்பி ஷேம்நு யாராச்சு kalaaicheenga.....?
Here is the link of archive, what got published on "The Hindu" News paper.http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2008022850771600.htm&date=2008/02/28/&prd=seta&

1 comments:

Ahamed irshad said...

இன்னொரு வால்பையனா அது சரி....